- இந்திர நந்தி,
- வேத நந்தி (பிரம்ம நந்தி),
- ஆத்ம நந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளது),
- மால்விடை (மகாமண்டபத்தில் இருப்பது),
- தரும நந்தி என்பவையாகும்
இந்திர நந்தி :

- ஒரு சமயம் இந்திரன் இடப (காளை) வடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கினான்.
- போகங்களின் அதிபதியாகிய, இந்திரன் வடிவாக விளங்கும் இந்த ‘நந்தியைப் போகநந்தி” என்றும், ‘இந்திர நந்தி” என்றும் அழைக்கின்றனர்.
- இந்த நந்தியைக் கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர்.
வேத நந்தி :

- இந்த நந்தியைக் கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் கருவறையை நோக்கியவாறு அமைக்கின்றனர்.
- வேதனான பிரம்மன், நந்தி வடிவம் தாங்கியமையால் இந்த நந்தியை ‘வேத நந்தி”, ‘வேத வெள்விடை”, ‘பிரம்ம நந்தி” என்று பல பெயர்களால் அழைக்கின்றனர்
- பிரம்மம் என்பதற்கு அளவிட முடியாத பெருமைகளை உடையது என்பது பொருளாகும். அதற்கேற்ப இந்த நந்தியை மிகப்பெரியதாகவும், கம்பீரமாகவும் அமைப்பர்.
ஆன்ம நந்தி :

- ஆலயத்தில் கொடி மரத்தையொட்டி தலைமை நந்தியாக அமையும் நந்தி ‘ஆன்ம நந்தி” ஆகும். இது உலக உயிர்களான (பசுக்கள்) ஆன்மாக்கள் பதியாகிய சிவபெருமானைச் சார்ந்து, அவருடைய நினைவில் நிலைப்பெற்றிருக்க வேண்டிய தன்மையை உணர்த்துகிறது.
- சிவாலயத்தில் பிரதோஷக் காலங்களில் இந்த நந்திக்குத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.
மால் விடை :

- ஒரு சமயம் திரிபுராதிகளை வெல்லுவதற்காக தேவர்கள் சிவபெருமானுக்கு சிறந்ததொரு தேரினைச் செய்து கொடுத்தார்கள்.
- தாங்கள் அளிக்கும் இந்தத் தேர் இல்லாமல் சிவபெருமானால் முப்புரங்களை வெல்ல முடியாது என எண்ணினாரர்.
- அதை உணர;ந்த சிவபெருமான், அந்தத் தேர்தட்டின் மீது தன் வலது காலை ஊன்றி ஏறினார் அவ்வாறு அவர்ஊன்றிய போதே அத்தேரின் அச்சு மளமளவென்று முறிந்தது.
- தேவர்கள் தாங்கள் செய்தளித்த ஒப்பரிய தேர் பெருமானின் ஒரு கால் அழுத்தத்தைக் கூடத் தாங்க மாட்டாமல் முறிந்தது கண்டு, அஞ்சி பெருமானைத் தொழுதனர்.
- அப்பொழுது திருமால் இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கி அவரை மகிழ்வித்தார்.
- இந்நினைவு நீங்காது இருக்கும் பொருட்டு தானும் நந்தி வடிவம் கொண்டு, அவர் சன்னிதியில் நிலையாக எழுந்தருளினார்..
- இந்த நந்தி சக்தி பதமான இரண்டாவது ஆவரணத்துள் அமைந்துள்ளதாகும். இதனை ‘மால்விடை”, ‘மால்வெள்விடை” என்று பலவாறு அழைப்பர்.
தரும நந்தி :

- மகா மண்டபத்தில் அமையும் சிறு நந்தியே ‘தரும நந்தி” என்பதாகும். பிரளயவெள்ளம் பொங்கிப் பெருகி வானளவு எழுந்து உலகினை அழிக்கும் அந்த சங்கார காலத்தில் யாவும் சிவபெருமானிடம் ஒடுங்கும்,
- அப்போது தருமம் மட்டும் நிலைபெற்று இடபடிவம் கொண்டு சிவபெருமானைத் தாங்கும். இவ்வாறு தன்னைத் தாங்கும் இடபத்தை பெருமான் ஆரத்தழுவிக்கொண்டார்.
- இவ்வகையில் தரும நந்தியானது, இறைவனைப் பிரியாது அவருடனேயே இருக்கும். இதை உணர;த்தும் வகையில், இந்த நந்தி இறைவனுக்கு அருகாமையில் மகாமண்டபத்திலேயே எழுந்தருளியிருக்கின்றது.
- பெரிய ஆலயங்களில் இத்தகைய ஐந்து நந்திகள் இருப்பதைக் காண்கிறோம்.
- திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலான தலங்களில் பஞ்ச நந்திகள் சிறப்புடன் போற்றப்படுகின்றன